சொறி, வயிற்று வலி, காமாலை போக்கும் பச்சிலை !

veekam sori vayittru vali

இந்த ஒரு பச்சிலை மட்டும் இருந்தால் போதும். உங்கள் உடலில் உள்ள தோல் நோய்கள், குடல் நோய்கள், மற்றும் காமாலை சார்ந்த வியாதிகள் அனைத்தும் தீரும்.

செந்நாயுருவி மருத்துவ பயன்

நாயுருவி வேறு பெயர்கள்

அபமார்க்கி, காஞ்சரி, சனம், சிகிசிரம், கதிரி, கரமஞ்சரி, சிறு கடலாடி, சுவானம், அபாமார்க்கம், நாய்குருவி, கிஷ்ணபன்னி, சகரிகம், செகரிகம், கேசரிகம், கேசரீகம், கொட்டாவி விட்டிறுக்கி, சேகரி, நாயரஞ்சி, மாமுநி.

தெலுகு : உட்டரெனி

மலையாளம் : கடலடி

கன்னடம் : உட்டரெனீ

இந்தி : சிர்செரா


நாயுருவி வகைகள்

நாயுருவி இரண்டு வகை உள்ளது நாயுருவி மற்றும் செந்நாயுருவி.

சுவை
கைப்பு, துவர்ப்பு, கார்ப்பு இவைகள் கலந்த சுவையுடையது

மாந்திரீகம்
வேரினால் வசியம் உண்டாகும்





செந்நாயுருவி பயன்கள்

செந்நாயுருவி மிகச் சிறந்தது சகத்தியுடையது. இதனால் வீக்கம், பாண்டு, காமாலை இவைகளை போக்கும். பெண்களின் ருது காலத்தில் குறைபாடு இருப்பின் வழக்கப்படி சமன்செய்யும்

செந்நாயுருவி சமூல கஷாயம்


செந்நாயுருவி சமூலத்தை கஷாயமிட்டு 8ல் ஒரு பங்கு அல்லது 4ல் ஒரு பங்கு வரையிலும் கொடுத்துவர சிறுநீரைப் பெருக்கித்தள்ளும்.

வேர் ஊறல் கஷாயம்


வயிற்று வலிக்கு மிகச் சிறந்த குணத்தை தரும்.

செந்நாயுருவி இலைச்சாறு

sen nayuruvi
வயிற்றுவலி, சருமச்சொறி இவைகளை நீக்கும், அதிகமாக குடித்தல் கர்ப்பத்தைக் கரைக்கும்.

செந்நாயுருவி இலை கற்கமும் வெல்லமும் சேர்த்து கொடுக்க சுரம் குணமாகும். அல்லது இலையுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து சுரத்துக்கு கொடுக்கலாம். இலையை நீர்விட்டரைத்து சிறுகடிகளுக்கு பூசலாம்.

செந்நாயுருவி இலைச்சாற்றை வெய்யிலில் வற்றவைத்து மெழுகு பதமாக்கி கொருக்குப் புண்ணிற்குப் போட குணமாகும்.

செந்நாயுருவி வேர் பயன்கள்
வேரை சூரணம் செய்து சிறிது மிளகுப்பொடியும் தேனும் சேர்த்துக் கொடுக்க இருமல் நீங்கும்.

செந்நாயுருவி பச்சை வேரால் பல்துலக்கிவர பல் அழுக்குகள், கரை நீங்கி முகவசீகரம் உண்டாகும்.

சுகப்பிரசவம் உண்டாக

வேரைப் பூசநட்சத்திரமும் ஞாயிறும் சேர்ந்த காலத்தில் நன்றாய் குளித்து ஆச்சாரத்துடன் எடுத்துவந்து பிரசவ அறையின் ஓர் மூலையில் தூக்கி கட்டி வைக்க அங்குள்ள பிரசவிக்கும் பெண்ணுக்கு விரைவில் சுகப்பிரசவம் உண்டாகும். அல்லது இடுப்பிலாவது, கொண்டையிலாது கட்டலாம். பிரசவித்த பின் இதனை கங்கை நதியில் எறிந்துவிட வேண்டும்.

செந்நாயுருவி வேரை சாம்பலாக்கி 5 குன்றின் எடை எடுத்து வெல்லத்தில் கொடுக்க சுகப்பிரசவம் உண்டகும்

செந்நாயுருவி தைலம்


செந்நாயுருவி சாம்பல் தெளிவு நீர் 16 சேர், நாயுருவிச் சாம்பால் 1 சேர் நல்லெண்ணெய் 4 சேர் இவைகளைச் சேர்த்துக்காய்ச்சி பக்குவத்தில் வடித்து கொள்ளவும். இத்தைலம் செவிடு, காது சீழ் முதலியவைகளை குணமாக்கும்.

செந்நாயுருவி விதை பயன்


செந்நாயுருவி விதைகளின் கற்கத்தை அரிசி கழுவிய நீருடன் உட்கொண்டு வந்தால் இரத்த மூலம் தீரும்

விதையை பாயசங்களில் சேர்த்து உட்கொள்ள மூளை நோய்கள் குணமாகும்



Post a Comment

0 Comments