FB YT IG

வறட்டு இருமல், சளி, குணமாக இப்படி செய்து பாருங்க !!! நோய் இருந்த இடம் தெரியாமல் போய்டும் !!!

Post Image

கல் உப்பு மஞ்சள் எலுமிச்சை இலைகள் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள்.

காலையில் வெறும் வயிற்றில், இரவில் உறங்க முன் ஒரு தேக்கரண்டி மஞ்சள் அரை தேக்கரண்டி மிளகு போட்டு சுட சுட நீர் அருந்துங்கள்.

ஏலம் கிராம்பு பட்டை போட்டு காய்ச்சிய நீரை அருந்துங்கள்.

பூண்டை சிறிதாக நறுக்கி சூடு நீரில் போட்டு மூடி வையுங்கள். ஆறியதும் அப்படியே எடுத்து குடியுங்கள். .

இருவேளை இஞ்சியை பொடியாக நறுக்கி சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள்.

எப்பொழுதும் சூடான நீரையே குடியுங்கள்.

அவசியம் நடை பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை தினமும் இரு வேளை செய்யுங்கள். மூச்சு பயிற்சி செய்யுங்கள்.

உணவில் மைதா மா வெள்ளை அரிசி வெள்ளை சீனி பால் உணவுகள் தாவர எண்ணெய்கள் தூள் உப்பு போன்றவற்றை உங்கள் உணவில் இருந்து அறவே ஒதுக்குங்கள்.

கடை உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள்.

நார் சத்து உள்ள தானியங்கள் சிறு தானியங்கள் சிவப்பரிசி காய் கறிகள் பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பழங்களை உணவோடு உற்கொள்ளாமல் உணவுக்கு முன் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

நன்றாக நீர் அருந்துங்கள்.

இரவில் நேரத்துக்கு உறங்கி அதிகாலையில் எழும்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் ஒவ்வொரு மாற்றமும் உங்கள் உடலில் எதிரொலிக்கும். அந்த மாற்றங்கள் நல்லதாக இருந்தால் அவஸ்தை பட வேண்டிய அவசியம் இருக்காது.

வாசகர்கள் கருத்துகள்

Comments