திரிபலா சூரணம் தயாரிப்பு முறை
திரிபலா சூரணம் தயாரிக்கும் முறை, திரிபலா சூரணம் செய்முறை, திரிபலா சூரணம் தயாரிப்பது எப்படி, திரிபலா சூரணம் செய்வது எப்படி, திரிபலா சூரணம் மருத்துவ குணம், திரிபலா சூரணம் என்றால் என்ன, திரிபலா சூரணம் பொடி, திரிபலா சூரணம் எப்படி சாப்பிடுவது, திரிபலா சூரணம் உட்கொi
திரிபலா சூரணம் என்றால் என்ன
திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் மிகவும் முக்கியமான அடிப்படையான சூரணங்களில் ஒன்று, மிகவும் சக்தி வாய்ந்ததும் எளிமையாக செய்ய கூடியதும், திரிபலா சூரணம் மூன்று மூலிகைகளை கொண்டு செய்ய கூடியது குடல் சார்ந்த அணைத்து நோய்களையும் குணமாக்கும். மேலும் இதை தகுந்த அணுபானத்தில் கலந்து கொடுக்க பல நேய்களை குணமாக்கும்.
திரிபலா சூரணம் செய்ய தேவையான மூலிகைகள்
- கடுக்காய் 100 கிராம்
- நெல்லிக்காய் 100 கிராம்
- தான்றிக்காய் 100 கிராம்
முதலில் மேற்கூறிய மூலிகைகள் மூன்றையும் முறையாக சுத்தி செய்து கொள்க.
கடுக்காய் சுத்தி முறை
எந்தக் குறைபாடும் இல்லாத சுத்தமான கடுக்காயை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன்
காடி நீர் கலந்து 3 நாட்கள் ஊற விட்டு பின்னர் வெயிலில் ஒரு வாரம் உலர்த்தி எடுக்கவும்.
காடி நீர் என்றால் என்ன
காடி நீர் என்பது பழைய சாதத்தில் ஊற்றி வைத்துள்ள தண்ணீர் இதை முறையாக தயாரிக்க வேண்டும் அரைபடி அரிசி எடுத்து சுத்தம் செய்து விறகு அடுப்பில் வேக வைத்து இறக்கி ஆறிய பின் ஒரு பானையில் கொட்டி தேவையான அளவு மழை நீர் ஊற்றி ஒரு வாரம் ஓரிடத்தில் வைத்து விட நன்றாக புளித்து காடியாகும் இது காடி நீர் ஆகும். சித்த மருத்துவத்தில் காடி என்று வரும் இடத்தில் பயன்படுத்தி கொள்ளக.
தன்றிக்காய் சுத்தி முறை
தான்றிக்காய் இதனைப் பசும் பாலில் வேகவைத்து நன்றாக வெயிலில் உலர்த்தி எடுக்கவும்.
நெல்லிக்காய் சுத்தி முறை
நெல்லிக்காயை கொட்டை நீக்கி நன்றாக உலர்த்தி எடுக்கவும்
திரிபலா சூரணம் செய்முறை
சுத்தித்த மூன்று மூலிகைகளையும் தனி தனியே நன்றாக இடித்து மெல்லிய துணியால் சலித்து எடுக்கவும் பின்னர் மூன்று பொடிகளிலும் சம எடை சேர்த்து நன்றாக கலந்து பத்திரப் படுத்திக் வைக்கவும்
திரிபலா சூரணம் உட்கொள்ளும் முறை
அவரவர் வயது மற்றும் உடல் தகுதிக்கு ஏற்ப இரவில் தேவையான அளவு எடுத்து சுடுநீரில் கலந்து பருகி வந்தால் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் மலச்சிக்கலும் நீங்கும்.
வாசகர்கள் கருத்துகள்