தற்கொலை அறிகுறிகள் இப்படிதான் இருக்குமாம்..
வயது, பாலினம், இனம், பொருளாதாரம், மருத்துவம், குடும்ப பின்னணி மற்றும் சமூக பிரச்சனைகள் இவற்றில் எதை குறித்தும் பொருட்படுத்தாமல் தற்கொலை என்பது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
தற்கொலை அறிகுறிகள் இப்படிதான் இருக்குமாம்.. உடனே கவனியுங்க!
தற்கொலை,மனச்சோர்வு, கவலை, சோகம், விரக்தி, மன அழுத்தம் இப்படியான பிரச்சனைகளின் இறுதி தீர்வாக பார்க்கப்படுவது அதிகரித்துவருகிறது. இப்படி தற்கொலை செய்துகொள்பவர்கள் அனுபவசாலிகள் அல்ல.. வாழ்க்கை படிக்கட்டில் அடி எடுத்து வைக்காத இளந்தளிர்கள். இறுதியான தீர்வு என்று தீர்வு அல்லாத ஒன்றை தேர்ந்தெடுத்து மொத்த வாழ்க்கையையும் முடித்துவிடுகிறார்கள்.
இப்படியான தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது? இவர்கள் தற்கொலை செய்து கொள்ளபோகிறார்கள் என்பதை கண்டறியும் வகையில் ஏதேனும் அறிகுறிகள் தென்படுமா? இது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
பதின்ம வயதில் இருப்பவர்கள் தற்கொலை முடிவை எடுப்பது ஏன்?
தற்கொலைக்கு முயற்சிக்கும் பதின்ம வயதினர் பெரும்பாலும் மனநல நோய் கொண்டிருக்கலாம். இவர்களுக்கு அந்த வயதுக்கே உரிய மன அழுத்தம் இருக்கலாம். சிறிய விஷயங்களே ஆயினும் தோல்வி, பள்ளி பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் கையாள்வதில் அவர்களுக்கு கடினமான நேரம் இருக்கலாம். சில நேரங்களில் இவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதை நம்ப முடியாமல் போகலாம். இன்னும் சிலர் தற்கொலை என்பதை குறுகிய கால தீர்வாக நினைக்கிறார்கள். உண்மையில் இது நிரந்தரமான மீட்க முடியாத முடிவு என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏன் வருகிறது?
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் பரம்பரையாக வரக்கூடியதா?
டீன் ஏஜ் வயதில் தற்கொலையை தூண்டும் ஆபத்து காரணிகள் என்ன?
பதின்ம வயதில் சில ஆபத்து காரணிகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ரீதியிலான மற்றும் வாழ்க்கை முறை ஆபத்து காரணிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
மனச்சோர்வு
பதட்டம்
இருமுனைக்கோளாறு அல்லது எதிர்ப்பை எதிர்க்கும் கோளாறு போன்ற மனநல நோய்
பருவமடைதல் அல்லது நீண்ட கால நோய் தொடர்பான மாற்றங்கள்
வாழ்க்கை சூழ்நிலைகளில்
மனநிலை கோளாறுகள்
தற்கொலைக்கு வழிவகுக்கும் செயல்களின் குடும்ப வரலாறு
குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரின் தற்கொலைக்கு வெளிப்படுதல்
உடல் அல்லதுபாலியல் துஷ்பிரயோகம்
வன்முறை அல்லது கொடுமைப்படுத்தலுக்கு ஆளான வரலாறு கொண்டவரக்ள்
நெருங்கிய அல்லது குடும்ப உறுப்பினர்களை இழப்பது அல்லது அவர்களுடன் வாக்குவாதத்தில் இருப்பது
கொடுமைப்படுத்துதல்
டீனேஜ் வயதினர் தற்கொலைக்கு முயல்வதை எப்படி கண்டறிவது?
டீன் ஏஜ் வயதினர் தற்கொலையை பற்றி யோசித்தால் சில அறிகுறிகள் மூலம் அதை கண்டறிந்துவிட முடியும்.
தற்கொலை பற்றி பேசுவது அல்லது எழுதுவது.. அதாவது நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன்.. இனிமேல் நான் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டேன் போன்று அவ்வபோது சொல்வது.
மதுவை பயன்படுத்துவது
நம்பிக்கையற்று உணர்வது.
எனக்கு உதவிசெய்ய யாருமில்லை என்று புலம்புவது
ஆபத்தான அல்லது அழிவு செயல்களை செய்வது
இன்னும் சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள்.
உண்ணும் முறை அல்லது உறங்கும் முறை
வழக்கமான வழக்கத்தை மாற்றுதல்
தனிமையை விரும்புதல்
மனநிலை மாற்றங்கள்
ஆளுமை மாற்றங்கள் இருக்கலாம்.
சில நேரங்களில் அறிகுறிகள் மாறும் போது கவலைகளும் இருக்கலாம்.
தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவர்களை எப்படி அரவணைப்பது?
டீன் ஏஜ் வயதினர் என்று இல்லாமல் சிறு குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் மனச்சோர்வு அடையும் போது அதற்கான காரணிகளை அவர்கள் கொண்டிருக்கும் போது அவர்கள் பேசுவதை முழுமையாக கேளுங்கள். அவர்களது கவலைகளை நீங்கள் முழுமையாக உள்வாங்கி கொண்டிருக்கிறீர்கள் என்பதை புரிய வையுங்கள். அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
அவர்கள் விரக்தி, அச்சம் அல்லது சோகமாக இருந்தால் அதை நீங்கள் உள்வாங்கிகொண்டு அதற்கான தீர்வை எடுப்பதாக சொல்லுங்கள். அவர்கள் சிக்கலை நிராகரிக்க வேண்டாம். அதோடு இந்த காரணத்தினால் அவர்கள் தங்கள் காயத்தை காயப்படுத்தி கொள்கிறார்கள அல்லது தங்கள் உயிரை மாய்த்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறார்களா எப்படி அவர்கள் மனநிலை இருக்கிறது என்பதை படிப்படியாக பேசி தெரிந்துகொள்ளுங்கள்.
அவர்கள் அறிந்த வரையில் மருந்துகள் அல்லது ஆயுதங்கள் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அவர்கள் இன்னும் அத்தகைய நிலையிலிருந்து மீளவில்லை எனில் அவர்கள் அருகிலேயே இருங்கள். மேலும் இவைஎல்லாம் ஒன்றுமே இல்லை. எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு என்று ஆறுதல் சொல்லி உரிய நிபுணரின் உதவியை பெறுங்கள். குழந்தைகளின் பிரச்சனைக்கு எங்கிருந்தெல்லாம் ஆதரவு கிடைக்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள்.
தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் சிகிச்சை உண்டா?
தற்கொலை அச்சுறுத்தல்கள். விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற உணர்வு கள் தொடர்ந்து இருந்தால் அது அலட்சியப்படுத்தகூடியது அல்ல. ஒரு நபர் பிரச்சனைகளை தீர்க்க முடியாத , சகிக்க முடியாததாக கருதலாம். உதவிக்காக ஏங்கலாம். தனிமையில் அழுகையை வெளிப்படுத்தலாம். இந்த அறிகுறிகள் தீவிரமான நிலையில் நெருக்கமானவர்களின் உதவியுடன் நிபுணரை அணுகுவது நல்லது.
வாசகர்கள் கருத்துகள்