கரு உண்டாக ஏற்ற நாள்

திருமணம் ஆகி, சில ஆண்டுகள் ஆகியும், ஒரு சில தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். இதனால் இவர்கள் மன வேதனை அடைந்து, மருத்துவரிடம் செல்வார்கள். அல்லது கோயில் , குளம் என சுற்றிர ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். கர்ப்பம் உண்டாக ஏற்ற அந்த நாட்கள் மட்டும் தெரிந்து கொண்டு, இணையர்கள் இணைந்தால் நிச்சயம் குழந்தை கிடைக்கும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. 


கர்ப்பம் உண்டாக ஏற்ற நாள் 


அறிவுள்ள குழந்தை பிறக்க, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க, நல்ல குழந்தை பாக்கியம் பெற சாஸ்திரம் கூறும் வழிகள், ஆண் குழந்தை பிறக்க முன்னோர் சொன்ன வழிகள், நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க, கரு உண்டாக சரியான நாட்கள், நல்ல கரு முட்டை, குழந்தை வளர்ப்பு இரகசியங்கள்,நல்ல குழந்தை பிறக்க, கருவின் இரகசியம், நல்ல கரு உண்டாக திருமணமான ஒரு பெண்ணிற்கு கருத்தரித்தல் என்பது மிகவும் விசேசமான ஒன்று அத்தோடு மட்டும் இல்லாமல் கணவனின் குலத்தினையும், குல  பெருமையையும் விரிவு படுத்தி, தாய் தந்தைக்கு (திருமண தம்பதி) மலடு என்ற பெயரை நீக்குவதும், கருவில் உண்டாகும் குழந்தையே.

karu undaga sariyana natkal


இவ்வளவு பெருமைக்குரிய கரு ஒரு நல்ல நாளில் உண்டானால் அதன் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும். நல்ல திறமை மிக்க, அறிவுள்ள குழந்தை பிறக்க சாஸ்திர நூல்கள் அறிவுறுத்தும் வழி முறைகளை பார்ப்போம்.

கரு உண்டாவதை தவிர்க்க வேண்டிய நாட்கள்
பெண் மாத விடாய் ஆன நாள் முதல் நான்கு நாட்கள் உறவு கொள்ள கூடாது. ஐந்தாவது நாள் முதல் பதினாறாம் நாள் வரை பெறும் உறவால் கருத்தரிதால் நல்ல சிசு பிறக்கும்.

உறவு கொள்ள கூடாத திதிகள்
சதுர்த்தி,
ஷஷ்டி
அஷ்டமி
ஏகாதசி
திரயோதசி
சதுர்தசி
அமாவாஸ்யை
பெளரணமி
இந்த திதிகள் மற்றும் மாத பிறப்பு நாளும் உறவுகொள்ள கூடாது

கரு உண்டாக ஏற்ற நல்ல நாள் அல்லது நல்குணமுடைய குழந்தை பிறக்க ஏற்ற நாட்கள்.
திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளில் வரும் கீழ் குறிப்பிட்ட லக்கனங்களில்.


ரோகிணி,
உத்தரம்,
உத்தரட்டாதி,
ஹஸ்தம்,
ஸ்வாதி,
அனுஷம் ,
மூலம்,
திருவோணம்,
சதயம்,
ரேவதி,


ஆகிய நட்சத்திரங்களில்

விருஷபம்,
மிதுனம்,
கடகம்,
கன்னி,
துலாம்,
தனுசு,
கும்பம்,
மீனம்,


ஆகிய லக்கினங்களில் கூடுவது கருவில் நல்ல பண்புள்ள குழந்தை உண்டாக ஏற்ற நாள் அல்லது காலமும் ஆகும்.

ஆண்/பெண் குழந்தை கண்டறிதல்
மாதவிடாய் ஆன நாள்முதல் கணக்கிட்டு ஒற்றைபடை எண் உடைய நாள் வருமாயின் அது பெண் குழந்தைக்கான கரு இரட்டைபடை எண் உடைய நாள் வருமாயின் அது ஆண்குழந்தைக் காண கரு என்று கூறுவர்.

தம்பதிகள் இருவரும் மனம் ஒருமித்து தார்மீக நன்மகப்பேறு பெற இறைவனை வேண்டி சேர்வது நல்லது என்று சாஸ்திரம் கூறுகிறது.

மேற்கூறிய குறிப்பின் படி பிறக்கும் குழந்தை நல்லொழுக்கம், அழகு, அறிவு, திறமை, ஆரோக்கியம், கொடை குணம், தாய் தந்தையை மதித்து நடத்தல் போன்ற சிறப்பான குணங்களுடன் பிறக்கும் என்று சாஸ்திர நூல் குறிப்பிடுகின்றன.



Post a Comment

0 Comments