தாங்க முடியாத சுளுக்கு வலியா இதஅதுமேல தடவுங்க
எந்த செலவும் இல்லாமல் மிக எளிமையாக வீட்டிலேயே சுளுக்கை சரிசெய்ய நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய சில வீட்டு வைத்திய முறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கற்றாழை ஜெல்
சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தசைப்பிடிப்பு நீங்கும்.
ஆயுர்வேதத்தில் தசை பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு மிக முக்கிய மருந்துகளில் கற்றாழை சேர்க்கப்படுகிறது.
கிராம்பு எண்ணெய்
கிராம்பு எண்ணெய்
பல் வலி போன்றவற்றிற்கு தான் அதிகமாக கிராம்பு எண்ணெய் பயன்படுத்துவோம். ஆனால் தசை வலி, தசை பிடிப்பு, சுளுக்கு போன்றவற்றிற்கு கிராம்பு எண்ணெய் மிகச்சிறந்த தீர்வைத் தரும்.
சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் சிறிது கிராம்பு எண்ணெயைத் தடவி, மசாஜ் செய்து வந்தால் சுளுக்குப் பிடித்த இடத்திலுள்ள வலி குறையும்.
ஒரு நாளைக்குத் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை கிராம்பு எண்ணெயைப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர, சுளுக்கு விரைவில் சரியாகும்.
வெங்காயம்
வெங்காயம் மிகச்சிறந்த வலி நிவாரணி என்பது உங்களுக்குத் தெரியுமா? வெங்காயம் தசைகளில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும்.
குறிப்பாக, கணுக்கால் மற்றும் பாதங்களில் எற்படும் சுளுக்கு நடக்க முடியாமல் பெரிய தொந்தரவு கொடுக்கும். அதுபோன்ற சுளுக்கை கூட வெங்காயம் சரிசெய்து விடும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு சுத்தமான துணியில் வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் நன்கு இறுக்கமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அந்த வெங்காயத்தின் சாறு பாதிக்கப்பட்ட இடத்தில் படுமாறு வைத்திருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம். ஒரு முறை செய்யும்போது 3 மணி நேரம் வரை பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வைத்திருக்கலாம்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் சரும அழகுக்குக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் மட்டுமல்ல, சுளுக்கு போன்ற மற்ற பிரச்சினைகளுக்கும் சிறந்த வலி நிவாரணியாகச் செயல்படுகிறது.
ஆலிவ் ஆயிலில் ஆன்டி- இக்ப்ளமேட்டரி பண்புகள் அதிக அளவில் இருக்கின்றன. இது உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கும்.
பாதிக்கப்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெயை மிதமான சூட்டில் தேய்த்து நன்கு மசாஜ் செய்தால் வலி உடனடியாகக் குறையும்.
ஆப்பிள் சிடார் வினிகர்
ஆப்பிள் சிடார் வினிகரில் ஆன்டி - பாக்டீரியல் பண்புகள் அதிக அளவில் இருக்கின்றன. இது உடல் வலி, உடல் வீக்கம் போன்றவற்றைக் குறைக்க உதவுகின்றன.
சூடான நீரில் 3 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரைக் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்து வந்தால் வலியும் வீக்கமும் குறையும். சுளுக்கு சரியாகும் வரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை வரை இதை செய்யலாம்.
வாசகர்கள் கருத்துகள்