Who should not eat idli and dosa at night...

 இட்லி, தோசை  யாரெல்லாம் நைட்ல சாப்பிட கூடாது...

night dinner foods




                தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரையில காலையில் இட்லி, என்றால் இரவு தோசை, காலையில் தோசை என்றால் இரவு சப்பாத்தி அல்லது இட்லி. இதுதான் வாரத்தின் ஏழு நாட்களும் சாப்பிடுகிறோம். இந்த இரண்டுமே மாவில் இருந்து தயாரிப்பது தான் என்றாலும் மாவை நொதிக்க வைத்து பயன்படுத்ததால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலுக்குத் தீங்கு செய்யாது என்று சாப்பிடுகிறோம். ஆனால் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை காலையில் எடுத்துக் கொள்வது போல இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாமா? அது ஆரோக்கியமானதா என்று கேட்டால் அது யோசிக்க வேண்டிய விஷயம். அந்த சந்தேகத்தை இப்போது தீர்த்திடலாம் வாங்க...

    தென்னிந்திய உணவு முறைகளில் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளுக்கு மிக முக்கிய இடமுண்டு. தினமும் நாம் சாப்பிடும் இட்லி, தோசை, ஆப்பம், தயிர் போன்ற மாவு வகைகளில் செய்யப்படும் அனைத்துமே நொதிக்க வைக்கப்பட்டவை தான். அவை உடலுக்கு நன்மை தான் என்றாலும் இரவு நேரத்தில் அந்த உணவுகளை எடுத்துக் கொள்வது சரியா என்கிற சந்தேகம் இருக்கிறது. வாங்க. அதை இங்கே தெளிவுபடுத்திடுவோம்.

​நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்

           நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள் குடலில் ஜீரண ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்க்ச செய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தை குறைக்க உதவி செய்யும்.

அதிலும் நொதித்த உணவுகளை நார்ச்சத்து உணவுகளோடு சேர்த்து எடுத்துக் கொண்டால் நிறைய ஆரோக்கிய மாற்றங்கள் உண்டாகும்.

ஆனால் நொதித்த உணவுகளை இரவு நேரங்களில் எடுத்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல.

​நொதித்த உணவுகளை யார் தவிர்க்க வேண்டும்?
            
                     இந்தியாவின் பிரபல டயட்டீஷியன்களில் ஒருவரான டாக்டர் டிம்பிள்ஜங்கடா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் இதுபற்றி ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் இரவு நேரத்தில் எல்லோரும் இந்த நொதித்த உணவுகளை எடுக்கக் கூடாது. சிலர் தவிர்ப்பது தான் நல்லது என்கிறார். அப்படி யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று வாங்க பார்த்திடுவோம்.

​உணவு அழற்சி
               
              சிலருக்கு அடிக்கடி உணவு அழற்சி, உணவுகளால் ஏற்படும் சகிப்புத்தன்மை இல்லாமை (ஹிஸ்டமைன் அதிகரிப்பால் ஏற்படுவது) சில உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள்.

அவர்கள் இரவு நேரத்தில் நொதித்த உணவுகள் எடுத்துக் கொள்வதன் மூலம் அஜீரணக் கோளாறுகள், தலைவலி ஆகியவை உண்டாகலாம்.

​அதிக சோடியம் உட்கொள்பவர்கள்

              உணவில் அதிகமாக உப்பு சேர்க்கிறவர்கள் நொதித்த உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.

நொதிக்க வைக்கப்பட்ட மாவு, ஊறுகாய் போன்ற உணவுகளில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். இயல்பாகவே உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள் இதை தவிர்ப்பது ரத்த அருத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் பிற உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.

​வாய்வுத் தொல்லை உள்ளவர்கள்

                  வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், குறிப்பாக அசிடிட்டி, வாய்வுத் தொல்லை பிரச்சினை உள்ளவர்கள் இரவு நேரங்களில் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தோசை, இட்லியாகவ இருந்தாலும் அது வயிற்று வலி, வயிறு உப்பசம் உள்ளிட்ட அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடும்.


​கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள்

                     கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்களும் இரவு நேரங்களில் நொதித்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

கர்ப்ப காலத்தில் இயல்பாகவே வயிற்று அசௌகரியப் பிரச்சினைகள் இருக்கும். தயிர், கெஃபீர், பனீர் போன்றவையாக இருந்தால் கூட அதை தவிர்த்திடுங்கள்.

அதேபோல தாய்ப்பாலூட்டும் பெண்களும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அம்மாவிற்கு வயிறு உப்பசம், வயிற்று வலி ஏற்படுவது போல குழந்தைகளுக்கு அது வயிற்று வலியை ஏற்படுத்தும்.

Post a Comment

0 Comments