எலும்பு முறிவு, இரத்தக் கட்டுக்கு பாரம்பரிய வைத்தியம்

இது நாகரீக உலகம். எனவே வீட்டில் கழிப்பறை, குளியல் அறை வரை வழவழப்பான மொசைக் தரை. இது காலத்தின் கட்டாயம். இதன் மறுபக்கம் முதியோரும், குழந்தைகளும் அடிக்கடி வழுக்கி விழுவது.

elumbu murivu gunamaga
எலும்பு முறிவு குணமாக

இதற்குப் பெரிய அளவில் எலும்பியல் மற்றும் நரம்பியல் மருத்துவம் என மொசைக் தரைச் செலவுடன் போட்டியிடும் மருத்துவச்செலவு.

எலும்பு முறிவு இன்றி நரம்பு பிசகுதல், தசை பிறழ்தல், ரத்தக்கட்டு போன்றமைக்கு எளிமையான மருத்துவம் காண்போமா?

ஒரு கைப்பிடி அளவு நெல்லை மண்சட்டியில் இட்டு கருகும் வரை வறுக்கவும். பின்பு நைசாகப் பொடிக்கவும். காப்பித்தூள் கலரில் பொடி இருக்கும். சாதம் வடித்த சூடான கஞ்சியில் சிறிது எடுத்து மேற்படிப் பொடியை அதில் கலக்கவும். சேறு பதத்தில் கலந்து மிதமானச் சூட்டில் பற்றுப் போடவும்.

அரிசி கழுவிய கழுநீரில் புளிய இலை - ஒதியன் இலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். மறுநாள் அதை சூடு செய்து பற்றுப்போட்டதை நன்கு கழுவவும். மூன்று நாட்களில் நல்ல குணம் தெரியும்.

Post a Comment

0 Comments